8 பேர் கொண்ட ஆவாக்குழு மீண்டும் இருவர் மீது வாள் வெட்டு!!

Read Time:2 Minute, 6 Second

யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக் குழுவினரால் இருவர் மீது வாளால் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (07) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சாரமாறியாக இந்த வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக்குழுவினைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாள் வெட்டுக்கு இலக்காகிய மற்றைய நபர் கோவில் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் என்றும் இந்த வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்ய அதிபராக 4வது முறையாக புடின் பதவியேற்பு!!(உலக செய்தி )
Next post அரசியலில் களமிறங்கும் திரிஷா? (சினிமா செய்தி)