உயிரிழந்த தம்பியை தோளில் சுமந்து சென்ற அண்ணன்!!(உலக செய்தி)
உத்தரகாண்ட் மாநிலத்தில் இறந்துபோன தனது தம்பியின் உடலை அவரது அண்ணன் தோளில் சுமந்து சென்றுள்ளார்.
பழத் தோட்டத்தில் வேலை செய்யும் பங்கஜ் என்பவரின் தம்பி சோனு காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சோனுவுக்கு பல இடங்களில் சிகிச்சை செய்தும் குணமடையாததால், டேராடூன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி, சோனு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, அம்புலன்ஸ் சேவை வழங்க வைத்தியசாலை நிர்வாகம் மறுத்ததுள்ளதையடுத்து, தனியார் அம்புலன்சில் எடுத்து செல்வதற்கு தேவையான பணம் இல்லாததால் தம்பியின் உடலை பங்கஜ் தோளில் சுமந்து சென்றார்.
பங்கஜின் நிலையை பார்த்த, சிகிச்சைக்காக வந்த திருநங்கையர், வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து மக்களிடம் 3,000 ரூபாய் திரட்டினர். இதை வைத்து, சோனுவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
வட இந்திய மாநிலங்களில் இதுபோன்று நடப்பது முதல்முறை கிடையாது. அங்கிருக்கும் சில அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று அம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்ட, பலரும் தங்களது உறவினர்களை இப்படி சுமந்து சென்ற புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Average Rating