கனவு கன்னி ஆக ஆசை இல்லை : ரகுல் ப்ரீத் தடாலடி !! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 25 Second

இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் கோபக்காரர்கள் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. சில நடிகர், நடிகைகள் இவர்கள் இயக்கத்தில் நடிக்கும்போது திட்டு வாங்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. ஆனால் கடினமான இயக்குனர்களிடம் பணியாற்றுவதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும், கனவு கன்னி ஆகும் ஆசை இல்லை என்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இதுபற்றி அவர் கூறியது: சினிமாவில் திறமைதான் பேசப்படும். மற்றபடி வேறு எதுவும் ஒருவரை நிலைத்து நிற்க செய்யாது.

தமிழில் தற்போது செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். செல்வா இயக்கத்தில் நடிக்கவுள்ள தாக எனது நண்பர்களிடம் சொன்னபோது திறமையான இயக்குனரிடம் நடிக்கிறாய் என பாராட்டினார்கள். செல்வராகவன் இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு நேரத்தில் அவர் கடினமாக வேலை வாங்குவார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படத்தின் கதையை எனக்கு அவர் சொல்ல வந்தபோது, ‘என்னிடம் (செல்வா) பணியாற்றுவது கடினம் கவலைப்பட வேண்டாம் இப்போது நான் மாறிவிட்டேன்’ என்றார்.

கடினமான இயக்குனர்களிடம் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள்தான் ஒரு நடிகரை அல்லது நடிகையை துல்லியமானவர்களாக மாற்ற முடியும். அதைத்தான் இயக்குனர் செல்வாவும் செய்கிறார். என்னை ரசிகர்கள் ஒரு கனவு கன்னியாக பார்க்க வேண்டும் என்பதைவிட நடிப்பு திறமை உள்ளவர் என்றுபார்க்கவே ஆசைப்படுகிறேன். அதுதான் என்னை நீண்ட நாட் களுக்கு மக்கள் மனத்தில் நிற்க வைக்கும். இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயமே இதயமே!! (மருத்துவம்)
Next post கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து ஆபத்தான வீடியோ!!