ஈரான் – அமெரிக்கா பிளவு எதிரொலி: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!
Read Time:1 Minute, 21 Second
ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதை அடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரானுடனுனான அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக் கொண்டதுடன், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தடை 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலானதாக இருக்கும்.
உலகின் பெட்ரோலிய வழங்கலில் 4 விழுக்காட்டைக் கொண்டுள்ள ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பெட்ரோலியத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை பிரென்ட் சந்தையில் 78 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் சந்தையில் 72 டாலர் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
Average Rating