விளையாடிக்கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே கைகலப்பு – ஒருவர் பலி!!

Read Time:1 Minute, 20 Second

தங்கல்ல, மெடில்ல பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிலருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த நபரை தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

தங்கல்ல, பெலிஅத்த பகுதியை சேர்ந்த ரவிந்து ரஷ்மிக எனும் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகப்படும் நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதிமன்ற வைத்திய பரிசோதனைகளுக்காக ஹம்பந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாணமான 10 நாளில் நடந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க!(வீடியோ)
Next post உணவாலும் உறவு சிறக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)