ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது!!
Read Time:56 Second
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கம, ரொபட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 20 கிராமும் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating