இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்…சாம்பல் புகையை கக்க தொடங்கியுள்ள மெராபி எரிமலையால் பொதுமக்கள் பீதி!!(உலக செய்தி)
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலையான மெராபி எரிமலை இன்று நீண்ட சத்தத்துடன் 5500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் சாம்பல் படர்ந்து காட்சியளிக்கிறது. ஹவாய் தீவுகளில் எரிமலை சீறிக் கொண்டிருக்கும் நிலையில், எரிமலை திடீரென வெடித்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எரிமலைக்குள் நெருப்பு குழம்பு கொதிக்கும் நிலையில் முதற்கட்டமாக சாம்பல் பறப்பதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
அடுத்த சில நாட்களில் நெருப்பு குழம்பை அள்ளி வீசி எரிமலை முழு வீச்சில் சீற்றத்தை காட்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சாம்பல் புகை சூழ்ந்துள்ளதால் எரிமலைக்கு அருகிலுள்ள பெரிய நகரமான யோகியாகர்த்தில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எரிமலை உள்ள பகுதிக்கு 3 மைல் தொலைவிற்குள் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு மெராபி எரிமலை வெடித்ததில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating