பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்ட குழந்தையின் மரணத்தில் சந்தேகம்!!

Read Time:1 Minute, 57 Second

மாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தை ஒன்றை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலின்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (14) மாலை 05.00 மணியளவில் கொழும்பு 10, ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் அங்கு சென்று பரிசோதனை செய்த போது 02 வயதுடைய மொஹமட் அலி மொஹமட் உஸ்மான் இகம் என்ற குழந்தை உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன், உடம்பில் சீனியின் அளவு அதிகரித்ததால் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் இடது காலில் தீக்காயங்கள் இருந்ததை அவதானித்துள்ள நிலையில் சந்தேகத்திற்குறிய மரணம் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

பின்னர் உயிரழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பபெற உள்ள நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!!
Next post பிரித்தானிய றகர் அணியின் இரண்டாவது வீரரும் உயிரிழப்பு!!