திருமணத்துக்கு பிறகு சீனியர் நடிகருடன் மீண்டும் ஜோடிபோடுகிறார் ஸ்ரேயா !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 14 Second

ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயாவுக்கு திடீரென்று வாய்ப்பு குறைந்தது. அதன் பிறகு வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் ரகசிய காதலன் ஆன்ட்ரி கொசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்துக்கு பிறகு நடிப்பதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார் ஸ்ரேயா. அவர் தொடர்ந்து நடிக்க கணவர் அனுமதி அளித்தார். ஆனாலும் பொருத்தமான வாய்ப்புகள் வரவில்லை. திருமணத்துக்கு முன்பு ஸ்ரேயா நடித்த நரகாசூரன் உள்ளிட்ட 3 படங்கள் திரைக்கு வராமலிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு புதியபட வாய்ப்பு வந்திருப்பதால், நடிப்பை தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

டோலிவுட்டில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் கடந்த ஆண்டு ‘கவுதமிபுத்ர சதகாரனி’ படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. தற்போது மீண்டும் அவருடனே ஜோடிபோட ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. இப்படத்தை வி.வி.விநாயக் இயக்க பேச்சு நடக்கிறது. ஏற்கனவே என்.டி.ராமராவ் வாழ்க்கை சரித்திரத்தில் பால கிருஷ்ணா நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் தேஜாவுக்கும். பாலகிருஷ்ணாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து தேஜா விலகுவதாக கூறினார். எனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடர முடியாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை பாலகிருஷ்ணாவே ஏற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியக்க வைக்கும் மனிதன் – அற்புத திறமை!!(வீடியோ)
Next post 1000 வருடங்களாக சமநிலையில் உள்ள 7 மிரளவைக்கும் பாறைகள்!!(வீடியோ)