இரும்பு கூண்டுக்குள் அடைபட்ட கவர்ச்சி நடிகை !!(சினிமா செய்தி)
கமலின் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். இரும்பு கூண்டுக்குள் தன்னைத்தானே சிறைவைத்திருந்த நிலையில் காணப்பட்ட அவர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதுபற்றி அவர் கூறியது: பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் பல பகுதியில் இந்த கொடுமை நடக்கிறது. வீட்டில் சிறிய அறையில் அடைபட்டிருக்கும் பெண் குழந்தைகள் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்கள்படும் துன்பத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இதுபோன்ற கொடுமை தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நானே இரும்புகூண்டுக்குள் அடைத்துக்கொண்டிருக்கிறேன்.
பாலியல் தொல்லைக்கு ஆளாகாமல் பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிமிடத்துக்கும் இதுபோன்ற பாலியல் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. அதை உலகுக்கு வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படியொரு செயலை நான் செய்திருக்கிறேன். பெண் குழந்தைகளை பாலியல் தொல்லையிலிருந்து மீட்க அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.
Average Rating