அனுஷ்காவுக்கு திருமண பரிகார சிறப்பு பூஜை !!(சினிமா செய்தி)
நடிகை அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த பாகுபலி, பாகமதி படங்கள் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. 36 வயதாகும் அனுஷ்காவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். பாகுபலி ஹீரோ பிரபாஸுடன் காதல் என்ற கிசுகிசு வந்தது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் கிசுகிசுவை இருவருமே மறுத்தனர். இதற்கிடையில் அனுஷ்காவுக்கு பெங்களூரு மாப்பிள்ளை உள்ளிட்ட படித்த பணக்கார மாப்பிள்ளைகளை குடும்பத்தினர் பார்த்தனர். எதுவும் செட் ஆகவில்லை. அதேபோல் பிரபாஸுக்கும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திருமணம் செய்ய தயார் என கடிதம் எழுதினர். கூடவே ஜாதகத்தையும் அனுப்பினர். அவற்றை அவர் நிராகரித்தார். அனுஷ்காவுக்கு அவரது குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை பார்ப்பதுபோல் பிரபாஸுக்கும் குடும்பத்தினர் வேறு மணப்பெண் தேடி வருகின்றனர்.
பிரபாஸை பொறுத்தவரை சாஹோ படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க பேச்சு நடக்கிறது. அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பொருத்தம் அமையாத நிலையில் அவரது ஜாதகத்தை பார்த்தனர். அதில் திருமண தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியதையடுத்து திருமண தோஷ பரிகார பூஜை செய்யும்படி அனுஷ்காவிடம் தெரிவித்தனர். அவரும் நடிப்புக்கு இடைவெளிவிட்டுவிட்டு கோயில் கோயிலாக சென்று திருமண பரிகார பூஜைகள் செய்து வருகிறார். கடந்த வாரம் அவர் கேதார்நாத் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அப்போது உத்திராட்ச மாலைகள் அணிந்து பெண் சாமியார் போல் தோற்றம் அளித்தார். அந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானது. தற்போது அனுஷ்கா குடும்பத்தினர் வீட்டிலேயே சில பரிகார பூஜைகளை நடத்தி வருகின்றனர். ரசிகர்களை பொறுத்தவரை அனுஷ்காவும், பிரபாஸும் படங்களில் இணைந்ததுபோல் வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று இருவருக்கும் மெசேஜ் போட்ட வண்ணமிருக்கின்றனர். மனங்கள் இணைந்தாலும் குடும்பங்கள் இணைய தயங்குவதால் இருவரின் திருமணமும் தள்ளிப்போவதாக திரையுலகில் பேசப்படுகிறது.
Average Rating