கோடையிலும் குளிர்ச்சி!!(மருத்துவம்)
Read Time:1 Minute, 21 Second
கோடைக்காலத்தில் கீரைகளும் உடலை பாதுகாக்கின்றன.
* பசலைக்கீரை வெம்மை காரணமாக உண்டாகும் சிறுநீர்க் கோளாறுகளை தடுக்கும்.
* வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.
* சிறுகீரை நீர்க்கடுப்பிலிருந்து பாதுகாக்கும்.
* முருங்கைக்கீரையும், அகத்திக்கீரையும் வியர்வைத் தொல்லையை கட்டுப்படுத்தும்.
இது போலவே காய்கறிகளும் உதவும்.
* கேரட் கண்ணெரிச்சலை போக்கி கண் கோளாறுகளிலிருந்து காப்பாற்றும்.
* தக்காளி வெம்மையை தடுத்து தோலில் ஏற்படும் அரிப்பை தடுக்கும்.
* வாழைத்தண்டு நீர் பிரிய ஏதுவாகும்.
* வாழைப்பூ மூளைக்கு குளிர்ச்சியைத் தரும்.
* முட்டைகோஸ் தொண்டை வறட்சியைக் கட்டுப்படுத்தும்.
* பீட்ரூட் உடலை குளிர்விக்கும்.
* வெள்ளரி கோடைக்கு மிகவும் உகந்த வரப்பிரசாதம். அப்படியே சாப்பிடலாம். ஏ.சி. போட்டாற் போல் மாற்றி விடும்.
Average Rating