ஹெரோயினுடன் வைத்தியர் ஒருவர் கைது!!
ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 250 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.