கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை!!
Read Time:1 Minute, 22 Second
இன்று (04) காலை 8 மணியளவில் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராவத்த, கன்னன்தொட்ட பகுதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
6 ஆம் இலக்க லயம் வீட்டில் உள்ள பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 118 என்ற இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாராவத்த, கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தங்கராஜ விஜயரானி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்பவம் தொடர்பில் குறித்த பெண்ணுடைய 39 வயதான கள்ளக் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதின விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating