திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்ற போதை ஆசாமியை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்!!( உலக செய்தி)
திருப்பூரில் சிறுமியை அழைத்து சென்ற போதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர். திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக மறைவான இடத்திற்கு சென்றார். அப்போது, குடிபோதையில் அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் சிறுமியிடம் ஏதோ கூறி, கையை பிடித்து அழைத்து செல்ல முயன்றுள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த ஆசாமியை பிடித்து, அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
பொதுமக்கள் அந்த ஆசாமியிடம் விசாரித்ததில், அவர் பெயர் சிவா என தெரியவந்தது. சிறுமியை கடைக்கு அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, அந்த ஆசாமியை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating