மயானத்தில் குழி தோண்டிய ஒருவர் விபத்தி பலி!!

Read Time:1 Minute, 34 Second

பிலியந்தல, பட்டுவந்தர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் நேற்று (15) உயிரிழந்துள்ளார்.

மயானத்தில் இறுதி சடங்கு ஒன்றிற்காக சிலர் குழி ஒன்றை தோண்டி கொண்டிருந்த வேளை, அந்த இடத்திற்கு அருகில் இருந்த லொறி ஒன்றை சாரதி அல்லாத ஒருவர் செலுத்த முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தை செலுத்த தெரியாத குறித்த நபரால் லொறியை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பட்டுவந்தர, மடபாத பகுதியைச் சேர்ந்த 65 வயது நிரம்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!!
Next post குற்ற உணர்வு!!(மகளிர் பக்கம்)