காணாமல் போன இருவரும் சடலமாக மீட்பு!!
Read Time:44 Second
குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (24) மாலை குறித்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating