புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!

Read Time:1 Minute, 23 Second

கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (26) மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டகொடை புகையிரத நிலையத்தில் பொடி மெனிக்கே புகையிரதத்தை நிறுத்த முற்பட்ட போதே குறித்த நபர் புகையிரதத்தில் பாய்ந்துள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” !!(அவ்வப்போது கிளாமர்)
Next post என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!!!(மகளிர் பக்கம்)