போதைப் பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் இணைக்க திட்டம்!!
கொழும்பு நகரப் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ள பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு மீண்டும் அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக போதைபொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது.
ஜனாதிபதியின் ஆலோசனையின்படி போதை தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட உடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கூறினார்.
இந்த திட்டத்திற்கு அமைவாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் சுமார் நூறு பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த பிள்ளைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து மீண்டும் ஜூலை மாதம் 02ம் திகதி முதல் பாடசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Average Rating