டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கைது!!(உலக செய்தி)
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளி பெண் எம்பி பிரமிளா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டவிரோதமாக பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேறியவர்களில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரை டிரம்ப் அரசு கைது செய்து, குழந்தைகள் மற்றும் பெற்றோரை தனியாக பிரித்து வைத்து சிறையிலடைத்தது.
இந்தியாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைது செய்யப்பட்டு நியூமெக்சிகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் அரசின் இத்தகைய செயலை கண்டித்தும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்கக்கோரி வலியுறுத்தியும் 500 பெண்களுடன் இணைந்து, இந்திய வம்சாளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தார். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், காவல்துறையினர் கைது செய்தனர்.
Average Rating