விபத்தில் இளைஞர் பலி!!

Read Time:1 Minute, 20 Second

தம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் தொங்கொங்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதி ஒன்றிற்கு திருப்புவதற்கு முற்பட்ட வேளை தம்புள்ள நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் கலேவல நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ள, இப்பன்கடுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தினதும் வேனினதும் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனசுதான் டாக்டர்…!!(மருத்துவம்)
Next post ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது பொலிஸில் புகார் !!(சினிமா செய்தி)