பணியாளர்களின் கழுத்தை அறுத்துவிட்டு பாடசாலை எரித்த குழுவினர்!!( உலக செய்தி)
Read Time:51 Second
ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைபகுதியில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவ்வப்போது ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அரசுப் பாடசாலையை நேற்று தீவைத்து எரித்த பயங்கரவாதிகள், அந்தப் பாடசாலையில் இருந்த மூன்று பணியாளர்களின் தலையை வெட்டிக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாடசாலையின் நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating