ம.பி-யில் சிறுமி பலாத்காரம் குற்றவாளிகளை சாகும்வரை தூக்கிலிட வேண்டும்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆவேசம்!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 6 Second

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆவேசமாக கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம், மந்த்சாவுர் பகுதியில் கடந்த 28ம் தேதியன்று, பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பலத்த காயங்களுடன் சிறுமி கிடந்தாள்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் கூறுகையில், ‘‘பெண்களுக்கு அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. சிறுமி பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்கள், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிகளை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள்!!( வீடியோ )
Next post அடிபாவிகளா பச்சை பச்சையாக dubsmash பேசுறத பாருங்க!!( வீடியோ )