மலையாள சினிமாவில் மோசமான அனுபவம்… நடிகை பார்வதி பகீர் தகவல்!!
கேரளாவில் சமீபத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்டதுபோல் மோசமான அனுபவம் மலையாள சினிமா துறையில் உள்ளவர்களால் எனக்கும் ஏற்பட்டது என்று பிரபல நடிகை பார்வதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் கடந்த ஆண்டு காரில் செல்லும்போது கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகையின் முன்னாள் கார் டிரைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்துக்கு சதி திட்டம் தீட்டியதாக பிரபல நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மலையாள சினிமா உலகில் கடும் அதிரச்சியை ஏற்படுத்தியது.இதற்காக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப், சமீபத்தில் மீண்டும் சங்கத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவை கண்டித்து நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். இதற்கிடையே நடிகை பார்வதி, படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் மலையாள சினிமாவிலும் உண்டு என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.இவர் மலையாள முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள விவரம்:
என்னுடைய நெருங்கிய தோழியான நடிகைக்கு நடந்த மோசமான சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அந்த சம்பவம் நடந்தபோது நான் படப்பிடிப்பில் இருந்தேன். அந்த நடிகைக்கு யாரும் உதவிக்கு வராத ஒருநிலை இருந்தது. அதே போன்ற ஒரு மோசமான சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்தது. மலையாள சினிமா உலகை சேர்ந்தவர்களால் தான் எனக்கும் அந்த மோசமான அனுபவம் நேர்ந்தது. அவர்களின் பெயரை குறிப்பிட்டு தண்டனை வாங்கி கொடுக்க விரும்பவில்லை. அப்படி செய்தவர்கள் கிரிமினல்கள். அதற்காக நான் வருத்தப்பட்டு மூலையில் இருக்கவில்ைல. அதை விட்டு வெளிய வந்துவிட்டேன். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காக தான் இந்த சம்பவத்தை நான் தற்போது கூறுகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் சினிமாவில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. சினிமாவில் பெண்களை போக பொருளாகத்தான் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பார்வதியின் இந்த பேட்டி கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating