தாவூத் கூட்டாளியின் மனைவி கைது மும்பையில் ஏ.கே. 56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!!
மத்திய மும்பையின் நாக்பாடாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தானே போதை தடுப்பு பிரிவு போலீசாரால் ஜாகித் ஜலி காஷ்மீரி(47), சஞ்சய் ஷெராப்(47) ஆகிய 2 போதை மருந்து வியாபாரிகளை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தாவூத் இப்ராகிமின் மும்பை கூட்டாளியான நயீம்பாஹிம் கான்(42) பற்றிய விவரம் தெரியவந்தது.
இதையடுத்து மும்பை, கோரேகாவ் மேற்கு பாங்குர்நகரில் உள்ள நயீம்பாஹிம் வீட்டில் போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு நயீமின் மனைவி யாஷ்மீன்(35) மட்டும் இருந்தார். வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு ஏ.கே.56 ரக இயந்திர துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், 3 மேகசின்கள் மற்றும் 100 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக யாஷ்மீனை போலீசார் கைது செய்தனர்.யாஷ்மீன், ஜாகித் அலி, சஞ்சய் ஷெராப் ஆகிய மூவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூலை 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating