அணு ஆயுதம் ஒழிப்பு ஒப்பந்தம் வடகொரியா பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்!!

Read Time:1 Minute, 47 Second

சிங்கப்பூரில் ஜூன் 12ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது. அணு ஆயுதங்களையும் ஒழிக்கப்போவதாக அதிபர் கிம் ஜாங் உன் சம்மதித்து இதற்கான ஒப்பந்தத்தில் ைகயெழுத்திட்டார். இதுதொடர்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பிேயா வடகொரியா சென்றார்.

அங்கு தங்கியிருந்து தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் ஜப்பான் சென்ற பாம்பியோ அளித்த பேட்டியில், ‘‘அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியாவுடன் நடந்த பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது’’ என்றார். வடகொரியா ஆவேசம்: வடகொரிய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் கவலை அளிக்க கூடியதாகவும், அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாகவும் உள்ளது. அமெரிக்கா வைத்த கோரிக்கைகளும், நிபந்தனைகள் பேராசை உடையதாகவும், வன்முறையாக பறிப்பது போன்றும் உள்ளது’ என கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவளையம் எளிதில் மறையச் செய்யும் அற்புத வைத்திய முறை !!(மகளிர் பக்கம்)
Next post ஆச்சர்யம் அனால் உண்மை !! வைரல் வீடியோ!!