ஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி
Read Time:39 Second
ஈராக் நாட்டில் கிர்குக் நகரில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் ஒரு லாரியை ஓட்டிச் சென்று அதை வெடிக்கச் செய்தான். ஈரான் ஜனாதிபதி தலாபானியின் கட்சியான குர்திஸ்தான் தேச பக்த கட்சி அலுவலகத்தின் முன் இந்த குண்டு வெடித்தது. இதில் 17பேர் பலியானார்கள். அவர்களில் 10 பேர் பெண்கள். 2 பேர் சிறுவர்கள். இது தவிர 3 கார் குண்டுகள் வெடித்தன. அவற்றில் 6 பேர் பலியானார்கள்.