பைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு!!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 3 Second

நாம் தினம் தோறும் கடந்து போகும் சாலை ஓர சுவர்களில் பல்வேறு விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதில் பெரும்பாலும் மூல நோய்க்கான விளம்பர நோட்டீஸ்கள் இருக்கும். இன்றைய சூழலில் மூல நோய் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பிரதான பிரச்சனையாக இருக்கிறது. இதை அறிந்துகொண்டு பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி லாபம் ஈட்டுகிறார்கள். இந்த மூல நோயை வீட்டில் இருந்த படியே சரி செய்ய முடியும் என்று எளிய தீர்வை சொல்கிறார், பேராசிரியரும், சித்த மருத்துவருமான அப்துல் காதர்.

“தினந்தோறும் நீண்ட நேரம் பைக் ஓட்டுவது, வெயில் காலங்களில் காரமான உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் உடலில் மூல சூட்டை உருவாக்கும். இதனால் மலம் கழிப்பது கடினமாக இருக்கும், வலி ஏற்படும், மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதுவே மூல நோய்க்கான (பைல்ஸ்) அறிகுறிகள். இதை கவனிக்காமல் விட்டால் மலம் கழிக்கும் பகுதியில் வலியை உண்டாக்கி ஒரு வேர் போன்று உருவாகும். அதைத்தான் மூல நோய் என்று கூறுகிறோம். இது உடலின் உள்ளேயும், வெளியேயும் உருவாகும்.

இதை உள் மூலம், வெளி மூலம் என்று கூறுவோம். சிலருக்கு இரண்டும் வரும். இந்த பிரச்சனை ஆண், பெண் இருபாலருக்குமே இன்றைய சூழலில் சவாலாக இருக்கிறது. இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருந்து எளிமையாக நம்மால் வெளிவர முடியும். முடிந்தவரை உடலில் வெப்பத்தை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகைகள், காரமான மசாலாவை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் பைக் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண் விழிப்பது கூடாது. பகல் நேரங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சப்பாத்தி, பரோட்டா, குருமா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களில் பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். கீரை வகைகளில் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, சிறு கீரை, அரைக்கீரை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மலம் கழிக்கும் போது பிரச்சனை ஏற்படுகிறது என்றால் இந்த முறைகளை பின் தொடர வேண்டும். இவை உணவு முறைக்கான வழிகள். இந்த நோய் உள்ளவர்கள் அல்லது நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே எளிமையான ஒரு சில சிகிச்சை முறையை பின் பற்றலாம். ஆமணக்கு இலையை நெய் ஊற்றி இளஞ்சூட்டில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உறங்குவதற்கு முன்பு மூலம் உள்ள இடத்தில் வைத்துவிட்டு உறங்க வேண்டும்.

அடுத்து கடுக்காய் பிஞ்ைச இளஞ் சூட்டில் வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று வேைள சாப்பிட்டதற்கு பிறகு ஒரு கிராம் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை 15லிருந்து 20 நாள் வரை எடுத்து வந்தால் இந்த நோய் முழுமையாக குணமடையும்.இந்த இரண்டு பொருட்களும் எளிமையாக வீட்டு அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடியது. இதனால் பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்து பணத்தை விரயம் ஆக்க வேண்டாம்” என்கிறார் சித்த மருத்துவர் அப்துல் காதர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)
Next post முதலுதவி முக்கியம்!(மருத்துவம்)