ராஜபக்ஷ சம்­பந்தன் சந்­திப்பின் பின்­னணி -என்.கண்ணன் (கட்டுரை)

Read Time:16 Minute, 30 Second

சீனாவில், மக்கள் விடு­தலை இரா­ணுவம் உரு­வாக்­கப்­பட்ட ஆண்டு விழா, ஒவ்வோர் ஆண்டும் வெளி­நா­டு­களில் உள்ள சீனத்தூதரகங்களின் ஏற்­பாட்டில் கொண்­டா­டப்­ப­டு­வது இப்­போது வழக்­க­மாகி விட்­டது.

இலங்­கை­யிலும் அண்­மைக்­கா­ல­மாக இந்த கொண்­டாட்டம் மிகப்­பெ­ரி­ய­ளவில் இடம்­பெற்று வரு­கி­றது.

கடந்த திங்­கட்­கி­ழமை, கொழும்பில் சங்ரி லா விடு­தியில், மிகப்­பெ­ரிய நிகழ்­வாக சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் 91 ஆவது ஆண்டு விழா கொண்­டாட்டம் இடம்­பெற்­றது.

சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீனத் தூத­ரக பாது­காப்பு ஆலோ­சகர் ஆகியோர் இணைந்து ஏற்­பாடு செய்த இந்த நிகழ்வில், இம்முறை அர­சாங்கத் தரப்பைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­களைக் காண­வில்லை.

கடந்த ஆண்டு ஹில்டன் விடு­தியில் சுமார் 400 பேர் பங்­கேற்ற, சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் 90 ஆவது ஆண்டு விழாவில், பாதுகாப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன பிர­தம விருந்­தி­ன­ராகப் பங்­கேற்­றி­ருந்தார்.

இம்­முறை விழாவில் 600 பேருக்கு மேல் பங்­கேற்­றனர். இம்­முறை, பாது­காப்புச் செய­ல­ரான கபில வைத்­தி­ய­ரத்ன தான் பிர­தம விருந்தின­ராக அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் ஆளும்­கட்சி அர­சி­யல்­வாதி அல்ல.

அதை­விட, அரச தரப்பில் இருந்து எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் இந்த நிகழ்வில் பங்­கேற்­க­வில்லை.

அவ்­வா­றாயின், அர­சி­யல்­வா­தி­களை ஒதுக்கி விட்டு பாது­காப்புத் துறை சார்ந்­த­வர்­க­ளுக்குத் தான், சீனத் தூத­ரகம் அழைப்பு அனுப்­பி­யதா என்றால் அதுவும் இல்லை.

ஏனென்றால், இலங்­கையின் இரண்டு முக்­கிய அர­சி­யல்­வா­தி­க­ளான மஹிந்த ராஜபக் ஷவும் இரா.சம்­பந்­தனும் இந்த நிகழ்­வுக்கு அழைக்கப்­பட்­டி­ருந்­தார்கள்.

அவர்­க­ளுடன், முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷவும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் இப்­போது அரை அர­சி­யல்­வாதியாக மாறி விட்டார்.

எதிர்க்­கட்சி வரி­சையில் உள்ள அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மாத்­திரம் சீனா அழைப்பு விடுத்­தி­ருப்­பதன் பின்னால், எந்­த­வொரு உள்­நோக்­கமும் சீனா­வுக்கு இருக்­காது என்று யாராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.

ஆண்­டு­தோறும் சீனா தனது இரா­ணு­வத்தின் பலத்­தையும், பெரு­மை­யையும் பறை­சாற்­று­வ­தற்­காக இந்த ஆண்டு விழாவை நடத்­து­கி­றது.

சீனாவில் பெய்ஜிங் நகரில் மிகப் பெரி­ய­ள­வி­லான இரா­ணுவ அணி­வ­குப்பு நடத்­தப்­படும். அதில் இலட்­சக்­க­ணக்­கான சீனப் படை­யினர், அதி­ந­வீன போர்த்­த­ள­பா­டங்­க­ளுடன் அணி­வ­குத்துச் செல்­வது வழக்கம்.

வெளி­நா­டு­களில் சீனா அவ்­வா­றான இரா­ணுவ பலத்தைக் காட்­ட­மு­டி­யாது. ஆனால் தனது இரா­ணுவ பலத்தின் பெரு­மையைப் பேச முடியும். அதன் மதிப்பை உயர்த்திக் காட்ட முடியும்.

அதனை வைத்து, பிற நாடு­க­ளு­ட­னான இரா­ணுவ உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்ள முடியும். அதற்­காக தான் கொழும்­பிலும், வேறு பல நாடு­களின் தலை­ந­க­ரங்­க­ளிலும், இந்த விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

கொழும்பில் சீன இரா­ணு­வத்தின் ஆண்டு விழாக் கொண்­டாட்­டங்கள் என்­பது, வழக்­க­மாக ஒரு இரா­ணுவ அடை­யா­ளத்­துடன், இரண்டு நாடு­க­ளி­னதும் பாது­காப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான இலக்­குடன் தான் நடத்­தப்­ப­டு­வது வழக்கம்.

ஆனால், இந்­த­முறை ஒழுங்கு செய்­யப்­பட்ட சீன இரா­ணு­வத்தின் ஆண்டு விழா அவ்­வா­றான ஒன்­றாகத் தென்­ப­ட­வில்லை. அதற்கும் அப்­பாற்­பட்ட அர­சியல் நோக்­கங்­க­ளுடன் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டதா என்று சந்­தே­கிக்கத் தக்க பல கார­ணங்கள் உள்­ளன.

1. அரச தரப்பு அர­சி­யல்­வா­திகள் இல்­லாத ஒன்­றாக இருந்­தமை.

2. மஹிந்த ராஜபக் ஷவுக்கும், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம்.

3. எதிர்க்­கட்சித் தலை­வ­ரான இரா.சம்­பந்­தனும் அழைக்­கப்­பட்­டமை.

இந்த நிகழ்வில் அரச தரப்பு அர­சியல் பிர­மு­கர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டாமல் தவிர்க்­கப்­பட்­டதா என்று தெரி­ய­வில்லை. அவ்­வாறு தவிர்க்­கப்­பட்­டி­ருந்தால், அர­சாங்­கத்­துக்கும் சீனா­வுக்கும் இடையில் காணப்­படும் இடை­வெ­ளியை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்கும்.

இந்த நிகழ்வு நடப்­ப­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் தான், பொலன்­ன­று­வையில், சீனாவின் நிதி­யு­த­வி­யுடன் சிறு­நீ­ரக மருத்­து­வ­ம­னையை அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்­டப்­பட்­டது. (11ஆம் பக்கம் பார்க்க)

சீனத் தூது­வரும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பங்­கேற்­றி­ருந்த அந்த நிகழ்வில், சீனாவின் தேசிய கீதம் முதலில் இசைக்­கப்­பட்­டது தொடர்­பான சர்ச்­சையும் உரு­வா­னது.

அதை­விட, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பிய திட்டம் ஒன்­றுக்­காக 4,800 கோடி ரூபாவை வழங்­கு­வ­தாக சீன ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருப்­ப­தான செய்­தியும் இங்கு வைத்தே அறி­விக்­கப்­பட்­டது.

எனவே, அர­சாங்கத் தரப்­புடன் சீனா முரண்டு பிடிக்­கி­றதா என்­பதில் குழப்­ப­மான சந்­தே­கங்­களும் இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு, சீன நிறு­வனம் நிதி வழங்­கி­யது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­பட்­டதை சீனா விரும்­ப­வில்லை என்ற செய்­தியும் உள்­ளது.

இந்த விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முதல் நாள், பிர­தமர் ரணி­லுடன் தொடர்­பு­கொண்ட கொழும்பில் உள்ள சீனாவின் மூத்த இரா­ஜ­தந்­திரி ஒருவர், அது­பற்றி எச்­ச­ரிக்கை செய்­த­தா­கவும், அதன் பின்­னரே விவாதம் அடக்கி வாசிக்­கப்­பட்­டது என்றும் தக­வல்கள் உள்­ளன.

இதன் கார­ண­மாக, ஐ.தே.க.வைச் சேர்ந்த அர­சியல் பிர­மு­கர்கள் ஓரம்­கட்­டப்­பட்­டி­ருக்கும் வாய்ப்­பு­க­ளையும் நிரா­க­ரிக்க முடி­யாது.

எவ்­வா­றா­யினும், ஐ.தே.க. அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட, மஹிந்­த­வுக்கும் கோத்­தா­வுக்கும் சீனா கூடுதல் முக்­கி­யத்­துவம் அளிக்­கி­றது என்­பது மீண்டும் உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

ஆட்­சியை இழந்த பின்­னரும், மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும், சீனாவின் அரச விருந்­தி­னர்­க­ளாக அவ்­வப்­போது அழைக்­கப்­ப­டு­கின்­றனர். பேச்­சுக்­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன.

அதன் தொடர்ச்­சியை, சீன இரா­ணு­வத்தின் 91 ஆவது ஆண்டு விழா­விலும் காண முடிந்­தது.

இதில் இன்­னொரு முக்­கி­ய­மான விட­ய­மாக கூறத்­தக்­கது, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் அழைக்­கப்­பட்­டதும், அவர் பங்­கேற்­றதும்.

இரா.சம்­பந்தன் ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அழைக்­கப்­பட்­டாரா, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக அழைக்­கப்­பட்­டாரா என்­பது சீனா­வுக்குத் தான் வெளிச்சம்.

மஹிந்த ராஜபக் ஷவையும், கோத்­தா­பய ராஜபக் ஷவையும் அழைக்கும் போது, அவர்­களை, அர­சி­யல்­வா­திகள் என்ற முறையில் தான் அழைத்தோம் என்று நியா­யப்­ப­டுத்­தவும் சீனா அவ்­வாறு செய்­தி­ருக்­கலாம்.

அதற்கும் அப்பால், மஹிந்த ராஜபக் ஷவையும், இரா.சம்­பந்­த­னையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து பேச வைக்கும் முயற்­சி­யாக இருந்­தி­ருக்­கவும் வாய்ப்­புகள் உள்­ளன.

பொது­வாக, சீரான உறவைக் கொண்­டி­ருக்­கா­த­வர்­களை இணைப்­ப­தற்கு இது­போன்ற நிகழ்­வு­களை குடும்­பங்­களின் மத்­தியில் மாத்­திரம் நடத்­து­வ­தில்லை. நாடுகள் கூட, உயர்­மட்­டத்தில் நடத்­து­கின்­றன. அவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­ப­மா­கவே இந்த நிகழ்வு பார்க்­கப்­ப­டு­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு ஆத­ரவு கோரி, மஹிந்த ராஜபக் ஷவை இரா.சம்­பந்தன் சந்­திக்கப் போகிறார் என்று செய்திகள் வெளி­யாகி பல வாரங்­க­ளாகி விட்­டன. ஆனாலும் அந்தச் சந்­திப்பு நடக்­க­வே­யில்லை.

இப்­ப­டி­யான நிலையில், இவர்கள் இரு­வரும், சீனா ஒழுங்கு செய்த நிகழ்வில் ஆறு­த­லாக அமர்ந்து பேசி­யி­ருக்­கி­றார்கள். பல்­வேறு விடயங்­க­ளையும் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றார்கள்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில், மஹிந்த தரப்பில் உள்ள ஒரு­வரே வெற்­றியைப் பெற வேண்டும் என்று சீனா விரும்பும் என்­பதில் எந்த சந்­தே­கமும் கொள்ளத் தேவை­யில்லை.

ஏனென்றால் சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், ராஜபக் ஷவினர் தான் அவர்­க­ளுக்கு மிகவும் நம்­ப­க­மான கூட்­டா­ளிகள். அவர்­களை வெல்ல வைப்­ப­தற்­காக, சீனா இப்­போதே காய்­களை நகர்த்த ஆரம்­பித்­துள்­ளது என்றால் அதனை ஆச்­ச­ரி­ய­மான ஒன்­றாக பார்க்க முடி­யாது.

கடந்த முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­தவின் தோல்­விக்கு முக்­கி­ய­மான கார­ணி­யாக இருந்­த­வர்கள் தமிழ் பேசும் வாக்­கா­ளர்கள்.

இந்த தமிழ் பேசும் வாக்­கா­ளர்­களில் இலங்கைத் தமி­ழர்கள், மலை­யகத் தமி­ழர்கள், முஸ்­லிம்கள் என்று மூன்று வகை­யினர் உள்­ளனர். இந்த மூன்று தரப்­பி­னரும் ஒன்­றாக மஹிந்­தவை எதிர்த்­தி­ருந்­தனர்.

மஹிந்த தரப்­புக்கு இப்­போது, இந்த மூன்று தரப்­பி­னதும் ஆத­ர­வையும் பெற வேண்­டிய தேவை உள்­ளது.

ஏற்­க­னவே முஸ்­லிம்­களை வளைத்துப் போடும் முயற்­சிகள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. அதற்­காக பொது­ஜன முன்­ன­ணியில் முஸ்லிம் பிரிவு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது, அதற்­கான பேச்­சுக்கள், முஸ்­லிம்­க­ளு­ட­னான நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்தும் சந்­திப்­புகள், நிகழ்­வுகள் நடந்து வரு­கின்­றன.

மலை­யக அர­சி­யலில் இன்­னமும் ஆறு­முகன் தொண்­ட­மானை மஹிந்த அதி­க­ளவில் நம்­பு­கிறார். அண்­மையில் நுவ­ரெ­லி­யாவில் “எலிய” அமைப்­பினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட ஒரு கூட்­டத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ, விபூ­தியும் சந்­தனப் பொட்­டு­மாக, தமி­ழர்­களைக் கவரும் வகையில் தோன்­றி­யி­ருந்தார்.

இது மலை­யக வாக்­கா­ளர்­களை வளைத்துப் போடும் அடுத்த தந்­திரம்.

ஆனாலும், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வளைத்துப் போடு­வது தான் சிக்­க­லான காரி­ய­மாக இருந்து வரு­கி­றது.

கூட்­ட­மைப்பை வளைத்துப் போட்டு, தமிழ் வாக்­கா­ளர்­களின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்த வழி­தெ­ரி­யாமல் மஹிந்த தரப்பு நிற்­கின்ற சூழலில் தான் மஹிந்­த­வையும் சம்­பந்­த­னையும் சந்­திக்க வைத்­தி­ருக்­கி­றது சீனா.

இந்தச் சந்­திப்பில் தாம் ஆட்­சிக்கு வந்த பின்னர், தீர்வு ஒன்றைக் காண, கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைக்க வேண்டும் என்றும், வடக்கு கிழக்கை அபி­வி­ருத்தி செய்ய உதவ வேண்டும் என்றும் மஹிந்த கேட்­டி­ருக்­கிறார்.

ஆனால் சம்­பந்­தனோ புதிய அரசியலமைப்புக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இப்படியான நிலையில் தான், மஹிந்த, தமிழ் மக்களை சரியாக வழிகாட்டி ஒத்துழைக்காவிடின், கூட்டமைப்புக்கு மாற்றான புதிய அணிகள் உருவாகும், அப்படியான நிலையில் நீங்கள் தான் கவலைப்பட நேரிடும் என்று எச்சரிக்கும் தொனியில் கூறியிருக்கிறார்.

கோத்தாபய ராஜபக் ஷவுடன், சம்பந்தனை நெருக்கமாக்குவதற்கும் அவர் முயற்சித்திருக்கிறார் என்று தெரிகிறது.

எப்படியாவது, கூட்டமைப்பை வளைத்துப் போட்டு விட வேண்டும் என்பதில் ராஜபக் ஷவினர் ஆர்வம் கொண்டுள்ளனர். சீனாவுக்கும் அத்தகைய ஆர்வம் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இதில் சம்பந்தன், மஹிந்த, கோத்தா போன்றவர்களுக்கு வெவ்வேறு சிந்தனைகளும் நோக்கங்களும் இருந்தாலும், சீனாவைப் பொறுத்தவரையில் அதைப்பற்றிய கவலைகள் ஏதுமில்லை.

ஏனென்றால், சீனாவுக்கு யார் குற்றினாலும் அரிசியானால் சரி. அதாவது ராஜபக் ஷவினர் ஆட்சிக்கு வந்தால் சரி. அவ்வளவு தான் அதன் எதிர்பார்ப்பு.

-என்.கண்ணன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிக்கி சேலஞ்சில் கலக்கிய நடிகை – வைரலாகும் வீடியோ…!!
Next post சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருப்பீர்கள், எழுத்தால் படித்து பார்த்து கண் கலங்கியதுண்டா…!!