காட்டுப்பகுதியில் காத்திருந்த திடுக்கிடும் சம்பவம்..!!

Read Time:1 Minute, 34 Second

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மிகவும் உருகுலைந்த நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 65 – 70 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கபட்டுள்ளார். இவரிதன் முழங்கால்கள் மடக்கப்பட்ட நிலையில் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்தார்.

மேலும், சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் செருப்பும், 30 அடி தூரத்தில் இவரது கைக்குட்டை மற்றும் மேலாடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேலாடையில் திருகோணமலையில் இருந்து கிண்ணியாவுக்கு சென்ற பஸ் டிக்கட் காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேற்படி இச் சம்பவம் ஆனது கொலையா? என்பது தொடர்பாக காவற்துறையினர் விசாரணை செய்து வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமையை போக்க வேண்டுமா???..!!
Next post பாலாஜி மீது குப்பை கொட்டியது சரியா? – நித்யா அதிரடி பதில்..!!