களியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது!!
Read Time:51 Second
கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கடற்கரை களியாட்ட நிகழ்விற்கு போதைப்பொருளுடன் வருகை தந்த 30 இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் சோதனையிட்ட போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் 30 வயதிற்கு குறைந்தவர்கள் எனவும் அதில் 3 யுவதிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating