தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 14 Second
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல் ரீதியாக தவறான கருத்துக்களை சித்தரித்து பரப்பி குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 5-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டின் அரசியலில், சமூக வலைதளங்கள் மூலமான சர்வதேச நாடுகளின் தலையீடு குறித்த புகார் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளது.
அதற்கு முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பிவரும் பேஸ்புக், டுவிட்டர் ,இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து செயல்பட்டதை அந்நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. அந்த வகையில் இதுவரை 652 பக்கங்களை பேஸ்புக் முடக்கியுள்ளது.
Average Rating