ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு!!( உலக செய்தி)
Read Time:1 Minute, 7 Second
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சரான ஜெயக்குமார் பேரல்-ஓபனிங் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அங்கு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளவற்றை பார்வையிட்டு, அதுகுறித்த விளக்கங்களைக் கேட்டறிந்தார். அவருடன் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், மீன்வளத்துறை இயக்குநர் சமீரன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்க்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Average Rating