சீக்கியரை கொன்ற அமெரிக்கர் கைது!!( உலக செய்தி)
Read Time:1 Minute, 3 Second
அமெரிக்காவில் சீக்கியரை கத்தியால் குத்திக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவை சேர்ந்தவர் டெர்லாக் சிங் (55). அமெரிக்கா சென்ற இவர், கடந்த 6 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி தனது கடையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இவர் இறந்து கிடந்தார். அமெரிக்காவில் கடந்த 3 வாரத்தில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட 3வது தாக்குதல் சம்பவம் இது. இந்நிலையில், சிங்கை கொலை செய்த ராபர்டோ யுபெரியா (55) என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். இவர், டெர்லாக் சிங்கின் கடையில் வேலை செய்து வந்தவர். கொலைக்கான காரணம் குறித்து ராபர்டோவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Average Rating