போப் ஆண்டவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள் கோரிக்கை
Read Time:1 Minute, 21 Second
போப் ஆண்டவர் பெனடிக்ட் முஸ்லிம்கள் மனம் புண்படும்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதற்கு மறு நாள் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்துக்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய முஸ்லிம் தலைவர் அஞ்சம் சவுத்ரி, இஸ்லாத்துக்கு எதிராக பேசியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இஸ்லாத்தையும் அதன் இறைத்தூதரையும் அவமானப்படுத்தினால் அதன்விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டனர் என்றும், இது அமைதியான ஆர்ப்பாட்டம் என்றும் போலீசார் கூறினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது குறித்து போலீசுக்கு புகார் ஏதும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.