முன்னாள் மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை!!(உலக செய்தி)
மலேசியாவில் வாழும் அமெரிக்கரான ஜெரால்ட் வேய்ன் மைக்கேல்சன் என்ற 63 வயது முதியவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது புது மனைவியுடன் பிலிப்பைன்ஸ் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.
அப்போது அதனை எதிர்த்த அவரது முன்னாள் மனைவியை ஜெரால்ட் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வழக்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் ஜெரால்ட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் உரையாடிய ஜெரால்டின் வழக்கறிஞர் ராமு, ஜெரால்ட் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை எனவும், அவரை தாக்கிய முன்னாள் மனைவியிடம் இருந்து தற்காத்து கொள்ளும் முயற்சியில் அவர் இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் வழக்கறிஞர் ராமு தெரிவித்துள்ளார்.
Average Rating