தாய் – மகன் பாசக்கதையில் நடிக்கும் நேகா !!(சினிமா செய்தி)
Read Time:1 Minute, 21 Second
தாயின் தியாகம் தெரியாமல் கடைசிவரை வெறுக்கின்ற மகன், எவ்வளவு வெறுத்தாலும் கடைசி வரை மகனுக்காக வாழ்கின்ற தாய். இவர்களுக்கு இடையிலான பாசப் போராட்ட கதையாக உருவாகும் படம் ‘செல்லமடா நீ எனக்கு’. இதுபற்றி பட இயக்குனர் ஆனந்த்சிவம் கூறியதாவது: இக்கதையில் வசீகரன் ஹீரோவாக நடிக்க அம்மா வேடத்தில் செந்தி நடிக்கிறார். தண்ணியில் கண்டம், உச்சத்துல சிவா, ஒண்டிக்கட்ட படங்களில் நடித்திருக்கும் நேகா கதாநாயகியாக நடிக்கிறார்.
அமுதவாணன், போஸ் வெங்கட், மீராகிருஷ்ணன், ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டதுடன் படத்தையும் முழுமையாக பார்த்து பாராட்டினார். உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து உருவாகி யிருக்கும் இப்படத்தின் டைட்டில் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்து பாராட்டினார்.
Average Rating