மறுமணம் செய்த நடிகை கர்ப்பம் !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 2 Second

தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா ஆகிய படங்களில் நடித்திருப்பவர் காவ்யா மாதவன். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் நிஷால் சந்திராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதேபோல் தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் திலீப். இவர் மல்லுவுட் நடிகை மஞ்சுவாரியரை மணந்தார்.

இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். ஆனாலும் திலீப், மஞ்சுவாரியருக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து அவர்களும் கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். முன்னதாகவே திலீப், காவ்யா மாதவனுக்கு இடையே காதல் நிலவி வந்ததாக தகவல் பரவிவந்தது. அதை மறுத்துவந்த இருவரும் பின்னர் உறுதி செய்யும் விதமாக ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு திலீப், காவ்யா மாதவன் இருவரும் மறுமணம் செய்துகொண்டனர். தற்போது காவ்யா மாதவன் கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் அவர் தாய் ஆகவிருக்கிறார். திலீப்பை பொறுத்தவரை நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது !!
Next post அதிக சுவை… அதிக ஆபத்து…!!(மருத்துவம் )