ஈரானின் இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு: பலர் பலி!!( உலக செய்தி)
Read Time:1 Minute, 9 Second
ஈரானில் இன்று நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தென் மேற்கு நகரான அக்வாஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இருந்து இராணுவ சீருடை அணிந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1980 – 88 காலப்பகுதியில் ஈராக்குடன் இடம்பெற்ற போரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
Average Rating