நீரிழிவாளர்களின் தாம்பத்ய பிரச்னைகள்!!(அவ்வப்போது கிளாமர் )

Read Time:13 Minute, 49 Second

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு

இது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். நீரிழிவு நோய் என்பது தாம்பத்ய வாழ்க்கையில் நிச்சயமாக சவாலை ஏற்படுத்துகிறது. ஆண்-பெண் இருவருக்கும் சர்க்கரை நோய் இருக்கும்போது அது தாம்பத்ய உறவின் மகிழ்ச்சியைக் கேள்விக்குறியாக்குகிறது. சர்க்கரை நோய்க்காக மருத்துவம் செய்து கொள்பவர்கள் தங்களது பிரச்னைகள் குறித்து மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வதில்லை.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு துவக்கத்திலேயே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தீர்வு காண முடியும். மனதுக்குள் புதைப்பதால் தாம்பத்யப் பிரச்னையின் தீவிரத்தை அதிகரிப்பதுடன் தம்பதியரின் பிரிவு, திருமணத்துக்கு வெளியிலான உறவுகளுக்கும் வழி வகுக்கிறது. இது குறித்து விரிவாகப் பேசுகிறார் நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரான ஸ்ருதி சந்திரசேகரன்.

ஆண்களின் சங்கடங்கள்…

நீரிழிவு நோய் ஏற்பட்டு ஓர் ஆண் இனிப்பானவராக(நீரிழிவாளராக) மாறிய பின் அது உடலுக்கு பலவிதமான பாதிப்புகளை தருகிறது. குறிப்பாக, அத்தகைய ஆண்களுக்கு பாலுறவு ஆர்வம் படிப்படியாகக் குறைந்துவிடும். ஆரம்ப காலத்தில் வேறு ஏதோ ஒரு காரணத்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என அவர்களது பார்ட்னர் நினைத்துக் கொள்ளலாம். அவருக்கு என் மேல் ஆசை இல்லை, ஏதாவது கோபமாக இருக்கலாம், வேலைப்பளு, வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என பெண் தனக்குள் நினைத்துக் கொள்ளலாம்.

எனவே, தம்பதியர் இருவரில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ செக்ஸில் ஆர்வம் குறைகிறதென்றால் அந்தப் பிரச்னைக்கான காரணத்தை தம்பதியர் முதலில் மனம் விட்டுப் பேச வேண்டும். இப்படிப் பேசும்போதுதான் செக்ஸ் குறைபாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்ற மனநிலை உருவாகும். முக்கியமாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது செக்ஸ் தொடர்பாக தனக்கு உள்ள பிரச்னைகளை நோயாளி எந்தவித பயமும் இல்லாமல் சொல்ல வேண்டும்.

நோயாளி இது பற்றிப் பேச தயங்கும் சூழலில் மருத்துவர் இது பற்றிக் கேட்கலாம். சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு இது ஹார்மோன் குறைபாடாக வெளிப்படும். அதாவது டெஸ்டோஸ்டீரான் சுரப்பை பாதிக்கும். இதனை Hypogonadism என்கிறோம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது ஆண்களுக்கு ஆணுறுப்பில் உள்ள ரத்தநாளங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உடலுறவின்போது இயல்பாக நடக்க வேண்டிய ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை பாதிக்கப்படுகிறது.

நீண்ட நேரம் விறைப்புத் தன்மை இல்லாதபோது உடலுறவு கொள்வது ஆண்-பெண் இருவருக்குமே இன்பம் தருவதில்லை. இவர்களால் உடலுறவின் மூலம் அடையும் ஆர்கஸம் என்கிற உச்சகட்டம் நிகழாமல் போய் விடுகிறது. இந்த பிரச்னை காரணமாக ஆணுக்கு விரைவில் விந்து வெளியேறலாம். செக்ஸ் உணர்ச்சி குறைவதுடன் விந்தணுக்களின் தரமும் குறையும். இது தாம்பத்யப் பிரச்னை என்ற கட்டத்தைத் தாண்டி குழந்தையின்மைப் பிரச்னையாகவும் உருவெடுக்கிறது.

சரி… நீரிழிவால் பெண்ணுக்கு என்ன பிரச்னை?

பலரும் நீரிழிவு நோய் ஆண்களை மட்டுமே பாதிக்கும், பெண்களுக்கு அதனால் பிரச்னை இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், நீரிழிவு தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களுக்கும் தாம்பத்ய பிரச்னை ஏற்படுகிறது. பெண்ணுறுப்பு உள்ளடங்கியதாக இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் செக்ஸ் பிரச்னைகள் வெளியில் அதிகம் தெரிவதில்லை. சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறையும்.

உடலுறவின்போது பெண்ணின் பிறப்புறுப்பை வழவழப்பாக்கும் நீர்ச்சுரப்பு குறையும். பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போனால் உடலுறவின் போது எரிச்சல் உண்டாகும். அப்பகுதியில் பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். கருமுட்டை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேறாமல் போகலாம். மாதவிடாய் தள்ளிப் போகலாம். இது பெண்ணுக்கு கருத்தரிப்பதில் பிரச்னையை உண்டாக்குகிறது. உச்சகட்டத்தை பெண்ணால் எட்ட முடியாது. உடலுறவின் போது வலி இருக்கலாம்.

மன நலத்திலும் பாதிப்பு

செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது வெறுமனே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டும் அல்ல. ஆணும் பெண்ணும் சேர்ந்து மகிழ்வோடு வாழ்க்கைப் பயணத்தை நடத்துவதற்காக, ஈடுபாட்டுக்காக, அன்பின் பிணைப்புக்காக, அந்த உறவு ஆரோக்கியமாகத் தொடர்வதற்காக உடலுறவு அவர்களுக்கு இடையில் ஒரு ஈரமான இன்பத்தை அள்ளித் தருகிறது. உடலுறவின் மூலம் அப்படி ஓர் அன்பைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் போனால் அது பலவித மோசமான விளைவுகளையே உண்டாக்கும். ஒரு மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் செக்ஸ் அவசியமானதாக உள்ளது.

இது ஆண்-பெண் இருவருக்குமே psychosocial problem என்கிற சிக்கலை உண்டாக்குகிறது. ஆணுக்கு உடலுறவின் போது விறைப்புத் தன்மை ஏற்படாமல் போனால் அதுவே மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால் உண்டாகும் டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தால் சர்க்கரை நோயின் தீவிரம் அதிகரிக்கலாம். இந்த மன அழுத்தத்தால் அவர்களால் வேலையிடத்தில் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போகலாம் மற்றும் கணவன் மனைவி உறவிலும் சந்தேகம், சண்டைகள் ஏற்படலாம். இது ஒருவரின் சமூகம் மற்றும் குடும்ப வாழ்வில் பாதிப்பை உண்டாக்குகிறது.

இதைத்தாண்டி கருத்தரிப்பதும் சவாலாக மாறுகிறது. திருமணத்துக்கு முன்பே சர்க்கரை நோய்த்தாக்குதல் சாத்தியமாகிவிட்ட இந்த சூழலில் தாம்பத்ய குறைபாட்டைத் தவிர்க்க எவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்? அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தயக்கம் இன்றிச் சொல்லலாம். ஆனால், நோயாளிகள் தங்களது செக்ஸ் பிரச்னைகள் பற்றித் திருமணத்துக்கு முன்பாகப் பேச வெட்கப்படுகின்றனர். டாக்டர்களும் இது பற்றி வெளிப்படையாகக் கேட்பதில்லை.

திருமணத்துக்கு முன்னும் பின்னுமான செக்ஸுவல் ஹிஸ்டரி மிக முக்கியமான ஒன்று. இதைப் பற்றிப் பேசுவதன் மூலம் தான் ஆரம்பத்திலேயே இதற்கான தீர்வு காண முடியும். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே பெரும்பாலான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோய் வந்தவர்கள் மருத்துவர் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்வது. உணவுமுறையைப் பின்பற்றுவது, குறிப்பிட்ட நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலேயே சர்க்கரை அளவைப் பரிசோதித்து குறிப்பிட்ட அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாள்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் தாம்பத்ய இன்பம் அடைவதில் பிரச்னை வராது.

சர்க்கரை நோயுடன், செக்ஸ் பிரச்னையும் உள்ளவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் உள்ளன?

இதற்கு நிறைய வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. முதலில் எந்த இடத்தில் பிரச்னை என்பதைத் தெளிவாகக் கண்டறிய வேண்டும். அதாவது ஹார்மோன் பிரச்னையா? ரத்தக்குழாய் தொடர்பான பிரச்னையா? என்பதை வைத்தே சிகிச்சை அளிக்கப்படும். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அறிவுறுத்தப்படும். கண்டிப்பாக எடைக்குறைப்பு, உடற்பயிற்சி இரண்டும் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உதவும். உடற்பயிற்சி செய்யும்போது மூளையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் எண்டார்பின் உற்பத்தி ஆகிறது. இது உடலுறவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.

இதனுடன் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என அனைத்தையுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாண்டி ஹார்மோன் பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் எக்ஸ்டர்னலாக ஹார்மோன் கொடுக்க முடியும். இதற்கு ஹார்மோன் தெரபி சிகிச்சைகள் அளிக்கப்படும். ஆணுறுப்பு விறைப்புத் தன்மையில் பிரச்னை இருந்தால் அதனைத் தூண்டிவிடுவதற்கான மருந்துகள் உள்ளன. இதற்கான உபகரணங்களும் உள்ளன. யூராலஜிஸ்ட், எண்டோகிரைனாலஜிஸ்ட் ஆகியோர் இணைந்து பரிசோதனைகள் செய்து தாம்பத்ய குறைபாடுக்கு சிகிச்சைகள் அளிக்க முடியும். இதன் மூலம் மிகச்சரியான தீர்வு காண முடியும். பிரச்னையின் துவக்கத்திலேயே மருத்துவ சிகிச்சைகளுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்ன மாதிரியான லைஃப் ஸ்டைல் மாற்றங்கள் அவசியம்?

அந்தந்த வேளைக்கு உணவு எடுத்துக் கொள்ளலாம். உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். ரசாயனம் கலந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தினமும் 30 நிமிட உடற்பயிற்சி செய்யலாம். 7 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் வேண்டும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கலாம். குறட்டைப் பிரச்னையைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. குறட்டை விடுபவர்களுக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கலாம்.

ஆண்மைத்தன்மைக்கான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறட்டை விடுபவர்களுக்கும் குறைவாக இருக்கலாம். குறட்டை விட்டு சரியாகத் தூங்காத காரணத்தாலேயே பலருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. நன்றாகத் தூங்கினாலே தாம்பத்ய உறவில் பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம். கணவன் மனைவி இருவரும் இதனை தீர்க்கவே முடியாத பிரச்னையாகக் கருதாமல் மருத்துவ சிகிச்சைகள் மூலம் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்வை அடைய முடியும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18+ // பட்டுக்கோட்டையிலே ***த்தா பருப்பு விக்கையிலே.!!(வீடியோ)
Next post Weekend Workout !!(மருத்துவம்)