கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்…… மாலத்தீவு அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 12 Second

மாலத்தீவில் ளுக்கு எதிராக எந்தஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மாலத்தீவில் கடந்தமாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டதாக புகார் தெரிவித்து தற்போதைய அதிபர் யாமீன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் அவரது ஆட்சி முடிவடைய இருக்கும் நிலையில் யாமீன் எடுத்த இந்த முடிவு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் ஜனநாயக முறைக்கு விரோதமாக செயல்பட நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தேர்தலில் மாலத்தீவு மக்கள் அளித்த தீர்ப்புக்கு தற்போதைய அதிபர் யாமீன் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி யாமீன் சிறையில் அடைத்தார். மேலும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் பரப்புரைகளை இருட்டடிப்பு செய்தார். எனினும் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகம் அறியப்படாத எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சாலி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்!!(மருத்துவம்)
Next post வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)