அளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற தாதி!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 41 Second

ஜெர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரிந்தார்.

அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்தார். அதில் பலர் உயிரிழந்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் நோயாளிக்கு டொக்டர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.

கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் கடந்த 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் வைத்தியசாலையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்து நிமிடங்களும் கொஞ்சம் அக்கறையும்!!(மகளிர் பக்கம்)
Next post காவல்துறையிலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள்! (சினிமா செய்தி)