ஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்!!(மருத்துவம்)

Read Time:13 Minute, 57 Second

‘சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சரி… வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி… மருந்துக் கடைக்குச் சென்று ஏதாவது ஆன்டிபயாடிக்(Antibiotic) மாத்திரையை வாங்கி நாமாகவே உட்கொள்கிறோம். அதோடு மட்டுமில்லாமல் முழுதாக குணம் அடைந்து விட்டதாகவும் திருப்தி கொள்கிறோம். ஆனால், அதன் பின் ஏற்படுகிற பக்க விளைவுகள் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது.

அதனால், ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்’’ என அறிவுறுத்தும் இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் சுப்பிரமணியன் அது குறித்து இங்கே விவரிக்கிறார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆன்டிபயாடிக் உபயோகம் எந்த அளவு உள்ளது என்பது குறித்து, உலக சுகாதார மையம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதனடிப்படையில், ஆன்டிபயாடிக்கின் தேவையும், உற்பத்தியும் மிதமிஞ்சிய அளவுக்கு இந்தியாவில்தான் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக, ஆன்டிபயாடிக் உற்பத்தி விகிதம் அதிகரித்து வரும் அளவைப் பார்க்கும்போது, அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் தினமும் கூடிக்கொண்டே போகிறது என்பது தானாகவே புரியும். பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்தவிதமான காய்ச்சலாக இருந்தாலும் ஆன்டிபயாடிக் வேண்டும் என்ற தவறான சிந்தனை இங்கு நிலவுகிறது. ஆன்டிபயாடிக் மாத்திரையின் வீரியமும் தீவிரமும் மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை.

காய்ச்சலுக்கு எடுக்கிறோம்; கிருமிகள் தொற்றைக் கட்டுப்படுத்துகிறோம் என நினைத்து எல்லாவற்றுக்கும் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறார்கள். இது பெரிய தவறு. மருத்துவர்களிடமும் பொதுமக்களே கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குவதும் உண்டு. நோயாளியிடம் உங்களுக்கு ஆன்டிபயாடிக் தேவையில்லை என சொன்னாலும் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு இன்னும் 15 நிமிடம் தேவைப்படுகிறது.

எனவே, மருத்துவராக பரிந்துரைத்தால் அன்றி ஆன்டிபயாடிக் தானாகவே கேட்டு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மருந்துக்கடையில் தானாகவே சென்று ஆன்டிபயாடிக் கேட்டு வாங்குவதும் தவறு. சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஆன்டிபயாடிக் எழுதிக் கொடுத்துவிடுவது மருத்துவர்களுக்கு மிகவும் எளிதானதுதான். மருத்துவருடைய வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால், அதன் பின்விளைவுகளை பொதுமக்கள்தான் சந்திக்க வேண்டும்.

மருத்துவர்களின் கடமை‘இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்; இதற்கு நுண்ணுயிர்க்கொல்லி தேவையில்லை. பொறுமையாக இருந்தால் தானாகவே சரியாகிவிடும்’ என ஒரு நம்பகத்தன்மையை உண்டாக்கி, பொதுமக்களுக்கு மருத்துவர்கள் புரிய வைக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மருத்துவரும் ஆன்டிபயாடிக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பொதுமக்கள் ஆன்டிபயாடிக்கை தேவையறிந்து பயன்படுத்துவார்கள்.

இன்று எல்லா காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக் அவசியம் என மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இவ்வாறு சின்னச்சின்ன காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்வதால் பின்விளைவுகள் நிறைய ஏற்படுகின்றன என்பதையும் புரிய வைக்க வேண்டும். மருந்துக்கடைகள் செய்யும் தவறுமக்களின் இந்த தவறான எண்ணத்துக்கு மருந்துக் கடைகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.

நமது நாட்டில்தான் Over the counter என்ற முறையில் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தருகிறார்கள். வெளிநாடுகளில் எல்லாம் இப்படி வாங்க முடியாது. ஆனால், இங்கு மட்டும்தான் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இதுவும் நல்லது கிடையாது. இந்நிலையும் மாற வேண்டும். சிக்கலாகும் சிகிச்சைஏதாவது பிரச்னை என்றால் முதலில் ஒரு ஆன்டிபயாடிக் கொடுப்போம்.

அது வேலை செய்யவில்லை என்றால், இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் வெவ்வேறு ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம் என முடிவு எடுத்தோம். முந்தைய காலத்தில் இது சரியாக இருந்தது. ஆனால், இப்போது நோய்க்கிருமிகள் வலிமை அடைய அடைய நிறைய மருந்துகள் வேலை செய்வது இல்லை. முதல் தடவை ஆன்டிபயாடிக் கொடுத்த போதே நோயாளி உடலில் உருவாகிற கிருமிகளைப் பார்த்தால் எல்லா மருந்துகளுமே வேலை செய்யாத மாதிரி தெரிகிறது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு திறன் நன்றாகவே இருக்கிறது. ஆனால், நோய் மற்றும் தொற்றினைப் பரப்பும் கிருமிகள்தான் நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றன.பெண்களுக்குச் சிறுநீரில் தொற்று வருவது சகஜம். 10, 15 வருடங்களுக்கு முன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட Urinary infection ரொம்ப சாதாரணமானவை. ஒரு தடவை கொடுக்கப்படும் சிறு மருந்திலேயே குணப்படுத்திவிட முடிந்தது. தற்போது விலையுயர்ந்த பக்க விளைவுகள் அதிகம் உள்ள மருந்துகள் தேவைப்படுகின்றன.

பக்கவிளைவுகள்

ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வது அதிகமாக அதிகமாக பக்க விளைவுகளும் அதிகரிக்கும். செலவும் கூடும். வயது மற்றும் நோய் அடிப்படையில் பக்க விளைவுகள் அதிகரிக்கும். முதுமை அதிகரிக்க அதிகரிக்க எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்கும். ஏற்கெனவே ஒருவருக்கு கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு அடைந்து இருந்தால், அவருக்கு இன்னும் ரிஸ்க் அதிகம். அதேமாதிரி மூட்டு வலி உள்ளவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.

ஆன்டிபயாடிக்கை அனாவசியமாகப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல், வயிற்றுப்போக்கு, கால் நகம் பாதிக்கப்படுதல், சரும பாதிப்பு என உடலில் எந்த உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். சிலருக்கு இழுப்பு நோய் வரலாம். இதயத்துடிப்பு சீராக இல்லாமல் போகலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு வரலாம். இது அவரவர் எடுத்துக்கொள்கிற ஆன்டிபயாட்டிக் ரகத்தைப் பொறுத்தது. 20%தான் மனிதர்களுக்கானவை!

ஆன்டிபயாட்டிக்கில் 20%தான் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மீதியுள்ள 80% ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கே உணவாக தரப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நிறைய இறைச்சி, கூடுதலான பால், அதிக முட்டை கிடைக்கிறது. இந்த ஆன்டிபயாட்டிக் தண்ணீரில் கலந்து வரும். அதில் உருவாகிற கிருமிகள் நம்மை வந்தடையும்.

மேலும், கால்நடைகளுக்கு வரும் கிருமிகள் எல்லாம் மிகுந்த ஆற்றலுடன் வரும். எனவே, அவை மூலமாக நமக்கு வருகிற தொற்றுக்கள் எல்லாம் அதிக வீரியத்துடன் காணப்படுகின்றன. இதற்காக, டாக்டரிடம் போகும்போது அவர்கள் டோஸேஜ் அதிகம் உள்ள மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது பழங்கால மருந்துகளைக் கிட்டத்தட்ட யாரும் பயன்படுத்துவது கிடையாது. அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதும் நிறைய பேருக்குத் தெரியவில்லை.

தற்போது சாதாரண மருந்துகள் எல்லாம் வேலை செய்வது இல்லை. 1990-களில் டைபாய்டுக்கு சிறப்பான மாத்திரை பயன்பாட்டில் இருந்தது. உலகம் முழுவதும் அது பிரபலம். இது 100% நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. ஓரிரு நாளில் குணப்படுத்தக் கூடியது. இந்த மருந்தை சிறுநீரகம், நுரையீரல் தொற்று, காசநோய் போன்றவற்றைச் சரி செய்யவும் பயன்படுத்தப்பட்டது.

இன்று நமது நாட்டில் அதற்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. தாங்கு சக்தி குறைவு (Resistance)அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டென்ஸ் பற்றி நிகழ்த்திய ஆய்வு ஒன்றில், 2050-க்குள் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட, ஆன்டி-பயாடிக் ரெஸிஸ்டென்ஸ் குறைவு காரணமாக ஏற்படுகிற உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

அதாவது, புற்றுநோயால் 82 லட்சம் பேரும், ஆன்டிபயாடிக் வேலை செய்யாத காரணத்தால் ஒரு கோடி பேரும் உயிரிழப்பார்கள் என எச்சரிக்கிறது அமெரிக்க ஆய்வறிக்கை. மேலும் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸை அதிகரிப்பதற்கு 2050 வரை 100 டிரில்லியன் டாலர் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவுக்கு ரிஸ்க் அதிகம்உலக நாடுகளில் நமது நாட்டில் எழுதப்படும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைப் பார்க்கும்போது நமக்குத்தான் பிரச்னைகள் பல மடங்கு அதிகம். புதுப்புது பிரச்னைகள் இங்குதான் முதலில் கண்டுபிடிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, 2006-ம் ஆண்டு புதுடெல்லியில் NDM(New Delhi Metallo) என்ற தொற்று வகையைக் கண்டுபிடித்தனர். இது ஆன்டிபயாடிக்கில் தொற்றை அழிக்கக்கூடிய கடைசி ரகம்.

ரெசிஸ்டென்ஸ் பிரச்னை ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் முக்கிய பிரச்னையாக உள்ளது. முக்கியமாக, இந்தியாவில், இப்பிரச்னை அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள், மருத்துவர், மருந்தாளுனர், மருந்தகம், கால்நடைத் துறையினர் ஆகியோருக்கு உடனடியாக ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ் பற்றி புரிய வைப்பது அவசியம்.

இவர்களுடைய பங்களிப்பு இல்லையென்றால் அதிகளவில் உயிர்ச்சேதம் போன்ற அபாயகரமான நிகழ்வுகளைத் தடுக்க முடியாமல் போய்விடும். இதற்கு நுண்ணுயிர்க் கொல்லி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். மேலும், அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுகளைத் தொடர்ந்து கொடுப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், பிற்காலத்தில் சமூகத்துக்குப் பெரிய பிரச்னை எதுவும் வராமல் தடுக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிப்பு… குளிர்ச்சி… ஆரோக்கியம்…!!(மருத்துவம்)
Next post இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!!(அவ்வப்போது கிளாமர்)