கோர விபத்து – 47 பேர் பலி – பலர் காயம்!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 25 Second
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாபேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் வீதியில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating