புலிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற – இளைஞர் சுட்டுக்கொலை!
Read Time:1 Minute, 13 Second
எல்.ரீ.ரீ.ஈ. யினரின் வாகரை முகாமிலிருந்து தப்பிச்சென்ற புலி உறுப்பினர் ஒருவர் வாழைச்சேனை விபுலாந்தக் கல்லு}ரிக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புலிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற மயில்வாகனம் கோகுலம் (வயது 22) என்ற இளைஞரே புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தமது கட்டுப்பாடுகளை மீறிச் செல்பவர்களை இவ்வாறு படுகொலை செய்வது எல்.ரீ.ரீ.ஈ. யினரின் வழக்கமாகும்.
இதேவேளை, வவுனியா தனியார் பஸ் நிலையத்தில் நேற்றிரவு 8.00 மணியளவில் தம்பிராசா சசிகுமார் என்ற பொதுமகன் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.