குழு மோதலால் 19 வயது மாணவன் கொலை!!
Read Time:1 Minute, 7 Second
மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் 01.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதேசத்தில் உள்ள பின்னேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திஹகொட, மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating