முகமாலையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி!!
Read Time:50 Second
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதத்தில் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச் சம்பவம் இன்று (24) முற்பகல் 11.30 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating