கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 14 Second

* தோல் திக்கான எலுமிச்சைப் பழமாக இருந்தால் பழரசம் சரியாக வராது. அதற்கு 5 நொடி மைக்ரோ அவனில் வைத்து கசக்கி பிறகு நறுக்கி பிழிந்தால் நல்ல சாறுடன் இறங்கும்.
* தேங்காய் துவையல் செய்யும்பொழுது சீவிய மாங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்தால் நல்ல ருசி தரும்.
– என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.
*மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும்போது 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து வேகவைத்தால் வாசனையாக இருக்கும்.
– நா.செண்பகா, பாளையங்கோட்டை.

* காலிஃப்ளவர் கூட்டு செய்யும் பொழுது பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை தாளித்துக் கொட்டி சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, இன்ஸ்டன்ட் எலுமிச்சம் பொடி சேர்த்து செய்தால் சுவை வித்தியாசமானதாக இருக்கும்.

* ஊறுகாய் போடும் முன் உப்பை வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்துக் கொண்டு பிறகு அதில் ஊறுகாய்க்கான காய்களை போடலாம். இப்படி செய்தால் ஊறுகாய் சீக்கிரம் கெடாமலும், நன்றாக ஊறியும் இருக்கும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* புதினா சாற்றுடன் கொஞ்சம் மிளகுத் தூளும், வேண்டிய அளவு தேனும் கலந்து கலக்கிக் குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
– தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

* கடலைப்பருப்பு, பச்சரியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து அதனுடன் சிறிது உப்பு, தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலத்தூள் கலந்து இட்லித்தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ‘இட்லி டிலைட்’ தயார்.
* சிறிய ஜவ்வரிசி, அரிசி ரவை, தயிர், தேங்காய்த்துருவல், கொத்தமல்லி, மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கலந்து 5 மணி நேரம் ஊறவிடவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்த்து இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்க ‘முத்து இட்லி’ தயார்.
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட நெய் போல உறையாது.
* கல் உப்பில் காம்புடன் பச்சைமிளகாயை போட உப்பில் நீர் வராது.
* காம்புக் கிள்ளிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி தூவி கண்ணாடி பாட்டிலில் போட வாடாது, பழுக்காது.
– சு.கெளரிபாய், பொன்னேரி.

* சப்பாத்தி செய்து பாத்திரத்தினுள் வைத்து மூடி கொஞ்ச நேரம் கழித்து எடுக்கும் போது சிறிது விறைப்பாக இருக்கும். இதைத் தடுக்க சிறு சிறு இஞ்சித் துண்டுகள் நான்கு போட்டு வைத்தால் எப்போது எடுத்தாலும் மிருதுவாக இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* அகத்தி இலையை நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கு புண் ஆறும்.
– சண்முகத்தாய் செல்லையா, சாத்தூர்.
*ரசம் தயாரிக்கும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.
– ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.
* முட்டைக்கோஸ் சாற்றுடன் கேரட் சாறு கலந்து குடித்தால் கண் பார்வை கூர்மை பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post IVF சிகிச்சையில் லேட்டஸ்ட்!! (மருத்துவம்)
Next post நான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும்!! (உலகசெய்திகள்)