வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் பலி!!
Read Time:49 Second
வந்துரம்ப, தெவுந்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 07.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தீயில் எரிந்த வயோதிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வந்துரம்ப, தெவுந்தர பிரதேசத்தில் வசிக்கும் 90 வயதுடைய வயோதிப நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வந்துரம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating