நாய் மீது கல் எறிந்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்!! (உலக செய்தி)
Read Time:1 Minute, 22 Second
வட கிழக்கு டெல்லியின் வெல்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் கடை தொழிலாளி ஆபக் அலி, தனது செல்லப் பிராணி மீது கல்லெறிந்தால் கொலை செய்திருக்கிறார் நாயின் உரிமையாளர் மெஹ்தாப்.
ஆபக் அலி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை பார்த்து மெஹ்தாப்பின் நாய் குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுகிழமை அந்நாய் தன்னை பார்த்து குரைத்தபோது கடித்துவிடுமோ என்ற பயத்தில் அதன் மீது கற்களை வீசி விரட்டினார்.
இதை அடுத்து அலிக்கும் மெஹ்தாப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் மெஹ்தாப் தன்னிடமிருந்த துப்பாக்கி மூலம் அலியை சுட்டுக் கொன்றார்.
மெஹ்தாபின் மீது ஏற்கனவே கள்ள சாராயம் விற்பனை, மரிஜுவானா விற்பனை தொடர்பான பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating